முன் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை அதிகரித்தல், அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவை இலவசமாக வழங்குதல் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பங்களிப்புடனான ஓய்வூதியத் திட்டத்தை (Contributory Pension Scheme) அறிமுகப்படுத்துதல் ஆகிய முக்கிய முன்மொழிவுகளை, அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் (Budget 2027) சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கச் சேவையில் உள்ள பெண் ஊழியர்கள் எதிர்கொள்ளும் இடமாற்ற நடைமுறைப் பிரச்சினைகள், முன்பள்ளிகள் மற்றும் பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சட்டக் கட்டமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் சார்ந்த பிரச்சினைகளை ஆராய்ந்து, உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டி.ரி. வீரசிங்க உள்ளிட்ட உயர்தர அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment