முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
மாத்தறை, பிரவுன்ஸ் ஹில்லில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பு கொள்முதல் தொடர்பான வழக்கில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மல்வானை இல்லம் தொடர்பில் பசில் ராஜபக்ச சிக்கியிருந்தார்.
ஏற்கனவே பல ராஜபக்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
