நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஆறு மாவட்டங்களில் உள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)இன்று காலை (22) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
நிலை ஒன்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும், நிலை இரண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும், நிலை மூன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் மண்சரிவு ஏற்படுவதற்குரிய அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறி, துறைசார் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
