வெளிநாட்டு நாணய மாற்றுப் பணப்பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாடிக்கையாளர்கள் சிலருக்கு உரிய தொகையை விடக் கூடுதல் தொகை செலுத்தப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்து மக்கள் வங்கி உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
இந்தக் கோளாறு 2023 மே மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியிலேயே ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
