தூக்கி வீசப்பட்ட பயணி-இன்றைய ரயில் விபத்து தொடர்பில் சற்று முன் வெளியான மேலதிக தகவல்

 

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு, பெட்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்து நடந்த நேரத்தில் ரயிலில் பயணித்த பயணி ஒருவர் பெட்டிக்கு வெளியில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், அவர் கவிழ்ந்த ரயில் பெட்டிக்கும் ரயில் மார்க்கத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கும் இடையில் சிக்கியதால் காயமடைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

விபத்து காரணமாக கீழ் ரயில் மார்க்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல்க ரயில் மார்க்கம் மற்றும் மூன்றாவது ரயில் மார்க்கம் ஆகியவற்றில் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதாகவும் சம்பவ இடத்தில் இருந்த ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

விபத்து நடந்த இடத்திற்கு தற்போது ரயில்வே திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment