10ஆண்டு காதல் ; திருமணம் நடந்த சில மணி நேரங்களில் நடந்த சோகம்; மணமகன் உயிரிழப்பு

 

அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட்டான மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா​வின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட தேவ் பிஜி (26) பைலட்​டாகப் பணிபுரிந்து வந்​தார். பிஜி​யும் செவிலியர் ஜெஸ்னியும் சுமார் 10 ஆண்​டு​களுக்கு முன்பு நியூ டெஸ்​டமென்ட் தேவால​யத்​தில் முதன்​முதலில் சந்​தித்​துக் கொண்​டனர்.

அப்​போது முதல் காதலித்து வந்​தனர். இந்​நிலை​யில், அமெரிக்​கா​வின் ஜார்​ஜியா மாகாணம், டாசன்வில்லே நகரில் உள்ள ‘தி ரெவெர்' என்ற இடத்​தில் இவர்களது திரு​மணம் நடை​பெற்​றது.

சுமார் 400 விருந்​தினர்​கள் கலந்​து​கொண்ட இந்த திரு​மணத்​தில் தேவ் பிஜி மிக​வும் மகிழ்ச்சியாகக் காணப்​பட்​டார். திருமண வரவேற்பு முடிந்​ததும், ஹனிமூன் செல்​வதற்​காக தேவ் தம்​ப​தி​யினர் ‘ராபின்​சன் ஆர்​66' ஹெலி​காப்​டரில் ஏறினர்.

அப்​போது வானிலை மோச​மாக இருந்தது. இதனால் ஒரு பைலட் என்ற முறை​யில், இப்​போது ஹெலிகாப்டரில் பயணிக்க வேண்​டாம் என பைலட்​டிடம் தேவ் கூறி​யுள்​ளார். ஆனால், அதிக உயரத்​தில் பறக்​கலாம் என்று கூறி பைலட் ஹெலி​காப்​டரை இயக்​கி​னார்.

ஆனால் புறப்​பட்ட சில நிமிடங்​களி​லேயே, திரு​மணம் நடந்த இடத்​துக்கு அரு​கிலேயே உள்ள அடர்ந்த காட்​டுப் பகு​தி​யில் ஹெலி​காப்​டர் விழுந்து நொறுங்​கியது. இந்த விபத்​தில் டேவ் பிஜி மற்​றும் ஹெலி​காப்​டர் பைலட் ஆகிய இரு​வரும் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

பலத்த காயமடைந்த மணமகள் ஜெஸ்னி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்ளதாக  கூறப்படுகின்றது.  இந் நிலையில்   10 ஆண்டு காலம் காதலித்து  திருமணம்  நடைபெற்ற சில மணி  நேரங்களில் மணமகன் உயிரிழந்த  சம்பவம்  அதிர்ச்சியையும்  துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment