தனியார் பேருந்து ஒன்றில், பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் ஒருவரை மொனராகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொனராகலையிலிருந்து பிபிலை நோக்கிச் சென்ற இந்தப் பேருந்தில் பயணித்த 26 வயதுடைய பெண் ஒருவர், பேருந்துக்குள் நின்றுகொண்டு பயணித்துள்ளார்.
அந்தச் சமயத்தில், நடத்துனர் அவருக்குப் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்குச் சென்றதும் இது குறித்துத் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், அவர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அங்குள்ள வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட மொனராகலை பொலிஸார், மொனராகலை சிறிங்கல கீழ் பகுதி, தமிழ் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
