இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

 

இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என எரிசக்தி அமைச்சர்  அனுர கருணாதிலக்க உறுதியளித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், நாட்டுக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறையிலுள்ள QR குறியீட்டு முறைமை எதிர்வரும் காலத்திலும் நீக்கப்படமாட்டாது என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கும், நாட்டின் டொலர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்குமே இந்த முறைமை தொடரப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், மக்களின் தேவைக்கேற்ப தற்போது வழங்கப்பட்டு வரும் எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை (Quota) அதிகரிப்பது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




Post a Comment