மனைவி உடல் எடை அதிகமாக இருந்ததால் கணவன் யூடியூப் உதவியுடன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், பிரட்டத்தூரைச் சேர்ந்த கிரண் என்பவரது மனைவி பத்மஜா, அதிக உடல் எடையுடன் இருந்த காரணத்தினால், கிரணுக்கு அவரைப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பத்மஜா தனது கணவரின் நடத்தையைக் குறித்து சந்தேகம் கொண்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மனைவியைத் தனது மீது சந்தேகம் வராத வகையில் கொலை செய்யத் திட்டமிட்ட கிரண், அதற்கான வழிகளை யூடியூப் ஊடாகத் தேடியுள்ளார்.
விஷம் கொடுத்துக் கொன்றால் சந்தேகம் வராது என்பதை அறிந்து, ஐதராபாத்தில் இருந்து 80 ஆயிரம் ரூபா செலுத்தி இணையம் ஊடாக விஷத்தை வரவழைத்துள்ளார். அதனை , பத்மஜாவுக்குப் பால்கோவாவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
அதனை உண்ட அவர் மயங்கி விழுந்ததும், அவரது முகத்தில் தலையணையை வைத்து மூச்சுத் திணறடித்ததாக கூர்அப்படுகின்றது. பத்மஜாவின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் சந்தேகமடைந்த காவல்துறை, கணவரான கிரணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது.
விசாரணையில் அவர் தனது மனைவியின் உடல் எடை அதிகமாக காணப்பட்டதால் வெறுத்து அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, காவல்துறையினர் கிரணைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மனைவி உடல் எடையுடன் இருந்த காரணத்தினால் கணவனே அவரைக் கொன்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
