நாட்டு மக்களுக்கு சற்று முன் வெளியான பேரிடி தகவல்

 

நாட்டில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிலவும் மோசமான வானிலை காரணமாக சந்தையில் காய்கறிகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக பொருளாதார மையங்கள் தெரிவித்துள்ளன.

எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தால் பொருளாதார மையங்களுக்கு சிறு வணிகர்களின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தம்புள்ளை சிறப்புப் பொருளாதார மையத்தின் தகவலின்படி, ஒரு கிலோகிராம் காய்கறிகளின் மொத்த விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.

அதன்படி கிலோவுக்கு, போஞ்சி ரூ.500, தக்காளி ரூ.400, வெள்ளரிக்காய் ரூ.160, வெண்டைக்காய் மற்றும் வாழைக்காய் ரூ.200 முதல் ரூ.280 வரை, பாகற்காய் ரூ.420, கத்திரிக்காய் ரூ.370, அவரைக்காய் ரூ.360, கறி மிளகாய் ரூ.420 என விற்பனையாகின்றன.

இதேவேளை, தம்புத்தேகம பொருளாதார மையத்தின் தகவலின் அடிப்படையில், ஒரு கிலோகிராம் போஞ்சியின் சில்லறை விலை ரூ.600 முதல் ரூ.650 வரை உயர்ந்துள்ளதுடன், கறி மிளகாயின் சில்லறை விலை ரூ.450 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், தற்போது நிலவும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மலையகப்பகுதிகளில் உள்ள பல காய்கறி சாகுபடி நிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக எதிர்காலத்தில் காய்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

Post a Comment