கொக்கடிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வான் ஒன்று மண்முனை பகுதியில் திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று(10.05.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது, எவருக்கும் எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கொக்கட்டிச்சோலை மண்முனை வீதியில் சம்பவதினமான நேற்று(10) இரவு 7.00 மணியளவில் கொக்கடிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே வானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தீப்பிடித்து எரிந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
