படகு கவிழ்ந்து 28 வயது இளைஞன் பலி

 

கெக்கிராவ, கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள கிரிமெட்டியாவ குளத்தில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஆவார்.

 

உயிரிழந்த நபர் மேலும் ஐந்து பேருடன் கிரிமெட்டியாவ குளத்தில் படகு ஓட்டிச் சென்றபோது, படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment