கடந்த இரண்டு நாட்களில் அதிர்ந்தது இலங்கை

கடந்த இரண்டு நாட்களில் அதிர்ந்தது இலங்கை

கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.

இந்த விபத்துக்களில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.

ஏப்ரல் 13ஆம் திகதி 19 விபத்துகளும், புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் திகதி 17 விபத்துகளும் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த இரண்டு நாட்களில் மாத்திரம் 35 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஏப்ரல் 13ஆம் திகதி 14 மோதல்களும், நேற்று முதல் இன்று காலை வரையுமான காலப்பகுதியில் 21 மோதல்களும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *