இவரை தெரியுமா..! வெளிநாட்டிலுள்ள இலங்கை பெண் தொடர்பில் அவசர அறிவிப்பு

இவரை தெரியுமா..! வெளிநாட்டிலுள்ள இலங்கை பெண் தொடர்பில் அவசர அறிவிப்பு

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி ரஹிமா சஹாப்தீன் என்ற குறித்த இலங்கைப் பெண்ணின் அடுத்த வாரிசுகள் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ரஹிமா தற்போது நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு ஆவண ஆதாரங்களையும் வழங்க அவரால் இயலவில்லை.

அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகிறது.

ரஹிமா சஹாப்தீன் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் அல்லது அவரது உறவினர்கள், நண்பர்கள் குறித்த விபரங்கள் தெரிந்தவர்கள் பின்வரும் வழிகளில் வெளிவிவகார அமைச்சினைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

  • தொலைபேசி இலக்கம் (Hotline): +94 11 2275 530
  • மின்னஞ்சல் (Email): consular@mfa.gov.lk

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *