இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கிடையில் முதல் தடவையாக நேரடி விமான சேவை

 இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கிடையில் முதல் தடவையாக நேரடி விமான சேவைகளை இம்மாதம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வியட்நாமுக்கு சொந்தமான 02 விமான சேவைகளின் ஊடாக இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி, அருண ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க மற்றும் வியட்நாமுக்கு இடையில் விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வியட்நாம் எயார்லைன்ஸ் விமான சேவையின் ஊடாக எதிர்வரும் 16ஆம் திகதி முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் வியட்ஜெட் விமான சேவையும் அதன் பயண சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இவ்விரு விமான சேவைகளும் ஆரம்ப கட்டத்தில் வாரத்திற்கு தலா 03 விமானப் பயணங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அருண ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Post a Comment