துடி துடிக்க பாலியல் நாசம் செய்யப்பட்டு முற்புதருக்குள் கிடந்த 3 வயது குழந்தை பலி

 

இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது. 

சிப்காட் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்க்கும் வடமாநில தம்பதியின் 3 வயது குழந்தை பாலியல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் முட்புதரில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

உடனடியாக கும்மிடிப்பூண்டி அரச வைத்தியசாலையில் குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ஸ்டான்லி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஸ்டான்லி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

இதையடுத்து குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி என்பவரை பொலிஸார் கைது செய்தனர். 

பிபின் மஞ்சி உள்ளிட்ட 4 பேர் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து அழைத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment