வீடு திரும்பிய விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி-கதறி துடித்த பிள்ளைகள்

 

பொலன்னறுவை - மெதிரிகிரியைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(13.05.2026) இடம்பெற்றுள்ளது.

மேலும் தெரியவருவதாவது,

மேற்படி விவசாயி தனது வயலில் வேலைகளை முடித்துவிட்டு நேற்று(13) மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, திடீரென வழிமறித்த காட்டு யானை அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் 53 வயதுடையவர் என்றும் இவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெதிரிகிரியை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மரணச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment