பிள்ளைகளுடன் பொழுதை கழிக்க நினைத்த தந்தைக்கு நேர்ந்த துயரம்

 

களுத்துறை, கட்டுகுருந்த கடலில் நேற்று (03) நீராடச் சென்ற ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

55 வயதான நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் கடற்கரைக்கு வந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காணாமல் போன நபரை தேடும் பணிகளில் அப் பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.  

Post a Comment