தமிழகம் முழுவதும் வெடித்தது போராட்டம்-கலவரமும் ஆரம்பம்

 தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்க மறுக்கும் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் கட்சிக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திமுக கூட்டணியில் இருந்து 5 இடங்களை வென்றுவிட்டு தற்போது தவெகவுக்கு ஆதரவுகொடுத்ததால் திமுகவினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் பானு சேகர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு தமிழக ஆளுநர் மற்றும் பாஜகவை கண்டித்து கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதன்போது திமுகவினர் காங்கிரஸ் கட்சி கொடிகளை வீதியில் வீசி திமுகவினரும் கோஷம் எழுப்பி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

திமுகவினர் தாக்குதலில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் கட்சியினர் வாகனங்களில் ஏறி தப்பியோடியுள்ள நிலையில், இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment