மாத்தறை, தெனியாயா பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் 47 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் துறை நிபுணர் பாலித கருணபெம தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
தற்போது வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் குறைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வைரஸ் காய்ச்சல் ஒரு மாத காலமாக நீடித்து வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பின்னர் பல குழந்தைகள் வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த மூன்று அல்லது நான்கு நாட்களில் நோய் பரவியிருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்த வைரஸ் பெரும்பாலும் அசுத்தமான நீர் அல்லது உணவு மூலம் பரவுவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெனியாயா பகுதி மக்கள் கொதிக்க வைத்த நீரைக் குடிக்கவும், சுத்தமான உணவை உட்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறோம்.
காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவரை நாடுங்கள். இந்த நோயாளிகள் தெனியாயா பகுதியிலிருந்து மட்டுமே பதிவாகியுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. நோய்ப்பரவியல் திணைக்களத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர் குழுவினர் நேற்று தெனியாயா பகுதிக்குச் சென்று, தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
