இலங்கையில் மற்றுமொரு சோகம்-விபத்தில் 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலே பலி

 

மாத்தறை, வெலிகமை பிரதேசத்தில் ஓட்டோ வீதியில் தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் 4 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி சிறுவன் நேற்று(14.05.2026) இரவு தனது பெற்றோருடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போதே, அந்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த 4 வயதுச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் பெற்றோரும், முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்துள்ளனர்.

மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment