மாணவனுடன் உடலுறவு கர்ப்பமான ஆசிரியை-காட்டு பகுதியில் எலும்பு கூடாய் மீட்கபட்ட சிறுவன் ; 2 ஆண்டுகள் பிறகு அதிர்ச்சி திருப்பம்

இந்தியா கொல்கத்தாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பாடசாலை மாணவன் தொடர்பான வழக்கு, திடீர் திருப்பத்துடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொல்கத்தாவின் ‘ஸ்டார் உயர்நிலைப்பள்ளி’யில் 10ஆம் வகுப்பு படித்த 16 வயது மாணவன் அருண் முகர்ஜி, 2024 ஜூன் மாதத்தில் பள்ளிக்குச் சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் தீவிர தேடுதல் நடத்திய போதிலும், ஆரம்பத்தில் எந்தத் தகவலும் கிடைக்காமல் வழக்கு முடங்கியதாக இருந்தது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு பழைய செல்போன் பழுது நீக்கும் கடையில் கிடைத்த தகவல்கள் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கடையில் பழுதான போனைச் சரிசெய்தபோது நீக்கப்பட்ட தரவுகள் மீட்கப்பட்டதில், காணாமல் போன மாணவன் மற்றும் ஒரு ஆசிரியை இடையிலான தனிப்பட்ட காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை பிரியா சர்க்கார் மற்றும் அவரது கணவர் சுஜித் சர்க்கார் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவன் மற்றும் ஆசிரியை இடையே ஏற்பட்ட உறவு காரணமாக ஏற்பட்ட மோதல் பின்னணியில் கொலை நடந்ததாக ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மாணவனின் உடல் காட்டுப்பகுதியில் மறைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மாணவனின் எலும்புக்கூடு மீட்கப்பட்டது.

மேலும், குறித்த மாணவனே அந்த பெண்ணின் குழந்தையின் தந்தை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் கொல்கத்தா நகரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், நீதிமன்றத்தில் தொடர்ந்த நடவடிக்கைகள் மூலம் குழந்தையின் பராமரிப்பு தொடர்பான தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்தக் குழந்தை தாத்தா–பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment