ஒரு அசுப யோகம் ஜூன் மாதத்தில் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகமானது ஜூன் 14 ஆம் திகதி மதியம் 1.15 மணிக்கு உருவாகி, ஜூன் 15 ஆம் திகதி காலை 8.56 மணிக்கு முடிவடையும். இந்த யோகமானது மிகவும் அசுப யோகமாக கருதப்படுகிறது. அதுவும் இந்த யோகம் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 5 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்கவுள்ளனர். குறுகிய காலம் இந்த யோகமானது உருவானாலும், அதன் தாக்கம் சில நாட்கள் வரை நீடித்திருக்கும்.
எனவே இந்த சூல யோகத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம் : சூல யோகத்தால் மிதுன ராசிக்காரர்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். எதிர்பாரா சில மோசமான செய்திகளைப் பெறக்கூடும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பதட்டங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி: சூல யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் எதிர்பார்த்த முடிவுகளை பெற முடியாமல் விரக்தி அடையக்கூடும். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். கால் வலி அல்லது உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் தொந்தரவு செய்யக்கூடும். அலுவலகத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தனுசு: சூல யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் உறவுகளில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற அதிகம் அலைய வேண்டியிருக்கும். பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் பண பரிவர்த்தனைகளை செய்யும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
மகரம்: சூல யோகத்தால் மகர ராசிக்காரர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரால் பிரச்சனையை சந்திக்க நேரிடும். வேலையில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அவசரப்பட்டு எந்த ஒரு புதிய முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்: சூல யோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் நினைத்தது எதுவும் நடக்காமல் அதிக எரிச்சலும், மன அழுத்தத்தையும் சந்திக்க நேரிடும். இக்காலத்தில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் பெரிய இழப்புகளுக்கு வழிவகுக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். இக்காலத்தில் மன அமைதியையும் பொறுமையையும் பேணுவது மிகவும் முக்கியம்.
