அம்பாறை , கல்முனை சந்தியிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் வீதியோரத்தில் நடந்து சென்ற குழந்தை மற்றும் பெண்ணொருவர் மீது மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் குழந்தையும் பெண்ணும் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
உஹன பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த விபத்தில் தொடர்புடைய டிப்பர் வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டடுள்ளதோடு, அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
