முல்லைத்தீவு விசுவமடு பகுதியை அண்மித்துள்ள புளியம்பொக்கனை பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இருவரின் சடலம் இன்று (02) மீட்கப்பட்டுள்ளது.
இவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில்
உயிரிழந்தவர்கள் திருகோணமலை ஜெய்க்காவை சேர்ந்த சிபி மற்றும் சாந்தன் என்று தற்போது உறுதிப்படுத்த பட்டுள்ளது.
இவர்கள் நேற்று முன்தினம் (31) BGL - 1286 இலக்கம் கொண்ட பஜாஜ் பல்சர் (கறுப்பு, சிவப்பு நிறம் , BGL – 1286
Bajaj – Pulsar
Black +Red)
மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள நிலையில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகின்றது.
கிளிநொச்சி பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்பு