கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி ஏ35 பிரதான வீதியில் புளியம்பொக்கணை பகுதியில்; ஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். புளியம்பொக்கணை பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் கனகராயன் ஆற்றின் கிளையில் இருந்து குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.