வல்லாதிக்க நாடொன்றை ஆட்டிப்படைத்து கதிகலங்க வைத்த சூறாவளி

வல்லாதிக்க நாடொன்றை ஆட்டிப்படைத்து கதிகலங்க வைத்த சூறாவளி

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் நேற்று இரவு 8:15 மணியளவில் உருவான ஒரு இராட்சத “சூப்பர்செல்” (Supercell) புயல், எனிட் நகரின் தென்கிழக்குப்பகுதியை முழுமையாகச் சிதைத்துள்ளது.

சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாகத் தரையில் நிலைகொண்டு ஆடிய இந்த மரண ஆட்டத்தில், வேன்ஸ் விமானப்படைத் தளம் மற்றும் குடியிருப்புகள் நிலைகுலைந்துள்ளன.

நெடுஞ்சாலை 81 மற்றும் சவுத்கேட் சாலைக்கு அருகிலுள்ள கிரேரிட்ஜ் (Grayridge) பகுதியில், வீடுகள் அவற்றின் அஸ்திவாரம் வரை தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

சூறாவளியின் வேகத்தில் பெரும் வாகனங்கள் பொம்மைகளைப் போலக் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

மின் கம்பிகள் முறிந்து, மரங்கள் பிளக்கப்பட்டு அந்த இடமே சிதைவுகளால் நிறைந்துள்ளது.

அமெரிக்க விமானப்படையின் மிக முக்கியமான பயிற்சி மையமான வேன்ஸ் தளம், சூறாவளியின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளானது

தளத்திலுள்ள கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன; வாகனங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதன்காரணமாகவே, வானிலை ஆய்வு மையம் இந்தப் பகுதிக்கு “மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையை” அறிவித்தது.

இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களுக்குள் (Storm Shelters) மக்கள் சிக்கியுள்ளனர்

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *