யாழை தொடர்ந்து மட்டு நகரிலும் பதின்ம வயது சிறுமி துஸ்பிரயோகம்-22 வயது காதல் மன்னன் கைது

யாழை தொடர்ந்து மட்டு நகரிலும் பதின்ம வயது சிறுமி துஸ்பிரயோகம்-22 வயது காதல் மன்னன் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 15 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 15 வயதும் 9 மாதங்களும் ஆகும். வீட்டில் தனிமையில் இருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் குறித்த சிறுமியுடன் நீண்டகாலமாகத் காதல் தொடர்பில் இருந்ததாகக் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

​இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் முன்னெடுத்து வருகின்றனர்.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *