முதலிரவில் தனக்கு 90 இலட்சம் தந்தால்தான் நான் ஒத்த்துழைப்பேன் முதலிரவு அறையில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி; போர்க்களமான திருமண வீடு!
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் , முதலிரவு அறையில் மணமகனிடம் 90 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு மணமகள் மிரட்டியதுடன், மணமகன் வீட்டாரை உயிருடன் எரிக்க முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆக்ரா – ஜகதீஷ்புரத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணச் சடங்குகள் முடிந்து புதுப்பெண் மணமகன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
முதலிரவுக்காக மணமகன் அறைக்குள் சென்றபோது, தன்னிடம் 90 இலட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்கினால் மாத்திரமே ஒத்துழைப்பேன் என மணமகள் நிபந்தனை விதித்துள்ளார்
