கந்தளாய் – செருவில வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரு பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (02.09.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் படுகாயமடைந்த பெண் ஒருவரும் மற்றொரு நபரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அறுவடைக்குப் பின்னர் விவசாயிகள் வயல்களில் காய்ந்த புற்களுக்கு தீ வைத்ததால் ஏற்பட்ட புகைமண்டலம் காரணமாக, வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிரே வந்த வாகனங்கள் தென்படாததால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
