ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியான தகவல்

துபாயில் இருந்து அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனச் சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்ற புலனாய்வு பணியகம் (CCIB) தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா பகுதியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில், சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வீடு (Apartment) ஒன்றை ஷிரான் பாசிக் கொள்வனவு செய்துள்ளதாகவும், அந்தச் சொத்து அவரது தந்தையின் பெயரிலேயே வாங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, இந்தச் சொத்து குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை இன்றைய தினம் (11) மத்திய குற்ற புலனாய்வு பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Post a Comment