நாளையுடன் நிறைவடைகின்றது

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக மற்றும் ஆதரவாக இதுவரை 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளை (31) நிறைவடைகின்றது. 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தைக் கடந்த 18ஆம் திகதி நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இந்தச் சட்ட மூலத்திற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. மேலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல சட்டத்தரணிகள் சங்கங்களும் சிவில் அமைப்புகளும் இதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. ஆளும்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆராச்சி உட்பட மேலும் சில தரப்பினர் சட்ட மூலத்திற்கு ஆதரவாக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், 22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ள அனைத்துத் தரப்பினரும் நாளை சிறப்பு யோசனை ஒன்றை முன்வைக்கத் தீர்மானித்துள்ளனர்.

Post a Comment