வாகன ஏலம் தொடர்பான நிதி மோசடி தொடர்பில் அமைச்சர் கே.டி. லால் காந்தவின் உளவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் கேகாலை குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அமைச்சர் கே.டி லால்காந்தவின் 59 வயது மைத்துனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையின் தகவலின்படி, வாகன ஏலத்தில் ஈடுபடுத்துவதாகக் கூறி சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 1,145,000 ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.