Posts
நேபாளில் மீண்டும் உயர்ந்தது ஆற்று நீர் மட்டம்
நேபாளத்தின் தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண்மை வாரியம் (NDRRMA), போதே கோசி (Bhote Koshi) ஆற்றின் அருகே வெள்ள நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வடக்கு நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் யாத்திரை நகரங்களைக் கடந்து, புதன்கிழமை அன்று சக்திவாய்ந்த வெள்ள நீரும் இடிபாடுகளும் சீறிப் பாய்ந்து சென்ற இரண்டு ஆறுகளில் இதுவும் ஒன்றாகும்.
ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு NDRRMA அறிவுறுத்தியுள்ளது.
