வீடு வாங்கும் ஆசையில் முகநூலில் பணத்தை இழந்த மக்கள்-இலங்கையர்களுக்கு எச்சரிக்கை தகவல்

பேஸ்புக் வழியாக கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர்

வீடுகளை நிர்மாணித்து தவணைமுறையில் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதாக தெரிவித்து  சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, நீதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், இலகுவான தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் குறிப்பிட்டு, குறிப்பாக முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விளம்பரங்களை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ள நிலையில், வாக்குறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காமல், கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment