ஐந்து பிள்ளைகளை நொடிக்குள் இழந்த தாய் - 30 பேர் பலி

 

கினியா நாட்டின் தலைநகர் கொனாக்ரியில் உள்ள முக்கிய குப்பை மேடு ஒன்று சரிந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்ததில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் எனவும், 22 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெண் ஒருவர் தனது 5 குழந்தைகளை இழந்து தவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இரவு முழுவதும் பெய்த கனமழையைத் தொடர்ந்து, நள்ளிரவு சுமார் 02:00 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அரசாங்க நடவடிக்கை: கினியா பிரதமர் மாமடோ ஊரி பா நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்து, மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார்.

இராணுவம் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் 'குறிப்பிடத்தக்க' அளவில் களமிறக்கப்பட்டு, பொக்லைன்இயந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பிடத்தக்க வகையில், கடந்த 2017 ஆம் ஆண்டும் இதே குப்பை மேடு சரிந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post a Comment