கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்தார்.
*மொத்த விண்ணப்பதாரர்கள்*: 3,72,310
பாடசாலை விண்ணப்பதாரர்கள்: 2,64,496 | தனியார் விண்ணப்பதாரர்கள்: 1,07,814
அனுமதி அட்டைகள் பாடசாலை மாணவர்களுக்கு அதிபர்கள் மூலமும், தனியார் மாணவர்களுக்கு தபால் மூலமும் அனுப்பப்பட்டுள்ளன. தொலைந்தால் பரீட்சை திணைக்கள இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கலாம்.
*முக்கிய அறிவுறுத்தல்கள்:*
1. பரீட்சை தொடங்க 1 மணி நேரத்திற்கு முன் மண்டபத்திற்கு வரவும்.
2. அனுமதி அட்டையில் கையொப்பம் சான்றொப்பம் கட்டாயம்.
3. அடையாளத்திற்கு தேசிய அடையாள அட்டை / சாரதி அனுமதிப்பத்திரம் / கடவுச்சீட்டு மட்டுமே.
4. கையடக்க தொலைபேசி, ஸ்மார்ட் வாட்ச், புளூடூத் உள்ளிட்ட எந்த இலத்திரனியல் சாதனமும் தடை.
மோசடியில் ஈடுபட வேண்டாம் எனவும், அவசர அனர்தத்திற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் கூறினார்.
