கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாணவியை கர்ப்பமாக்கிய காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்ததுடள் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 25 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.
சம்பவத்தன்று பள்ளியில் இருந்து மாணவி வீடு திரும்பியபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மாணவியின் வயிற்றில் கடும் வலி ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் வீட்டில் வைத்து மாணவிக்கு பிரசவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் மாணவியையும், சிசுவையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிசு உயிரிழந்தமை பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
மாணவியின் காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
