Posts

Dark Web-இல் கசிந்த ஆப்பிள், டெஸ்லா நிறுவனங்களின் அதிரடி ரகசியங்கள்!


ஆப்பிள் நிறுவனத்தின் இன்னும் வெளியாகாத புதிய 'ஐபோன் 18 ப்ரோ' (iPhone 18 Pro) தொடர்பான ரகசியத் தகவல்கள் கசிந்துள்ள விவகாரம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய விநியோகஸ்தரான டாடா எலக்ட்ரானிக்ஸ் (Tata Electronics) நிறுவனத்தில் இந்தத் தரவு திருட்டு (Data Breach) நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Dark Web எனப்படும் இணையத்தின் கருப்புப் பக்கங்களில், ஹேக்கர் குழுவொன்று இந்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

இதில் Iphone 18 Pro வின் உதிரிபாகங்கள், அவற்றின் சப்ளையர்கள் மற்றும் போனின் சில பிரத்தியேகப் படங்கள் அடங்கியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி டெஸ்லா, குவால்காம் மற்றும் டி.எஸ்.எம்.சி போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களின் ஆவணங்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், "இந்தத் தரவு திருட்டு குறித்து நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கு இந்தியாவின் தேசிய கணினி அவசரக்காலப் பிரிவு (CERT-In) என்ற சைபர் பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் செப்டம்பர் மாதம் இந்த புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகமாகவுள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் பாதுகாப்பான விநியோகச் சங்கிலியில் (Supply Chain) ஏற்பட்டுள்ள இந்த கசிவு, தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment