புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையானது எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 9-ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

இது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், பரீட்சையைத் திட்டமிட்டபடி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதம் 30-ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30-ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment