மீண்டும் அதிகரித்தது எரிபொருள் விலை

 

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் அளித்த பதிலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன்படாததே, கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

அதன்படி, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 104.1 டொலராகப் பதிவாகியுள்ளதுடன், டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.51 டொலராகவும் பதிவாகியுள்ளது.

Post a Comment