Posts

மட்டு நகரை உலுக்கிய சோகம்-இரு சிறுவர்கள் மூச்சு முட்டி பலி

 

மட்டக்களப்பிலுள்ள  ஹோட்டல் அறையில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் பதுளையிலிருந்து சிகிச்சைக்காக வந்து தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றின் அறையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த அனர்த்தத்தில் 05 மற்றும் 03 வயதுடைய இரண்டு குழந்தைகளே உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது 27.05.2026 நேற்று சுமார் 16.00 மணியளவில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு, திருகோணமலை வீதியில் உள்ள கோ-ஆப் இன் ரெஸ்டாரன்ட்டின் அறை எண் 107 லே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது இவ் தீ விபத்தில் அங்கு தங்கியிருந்த, எண் 25/01, நியூ வில்லேஜ், பஸ்ஸர வீதியைச் சேர்ந்த சந்தனி நிமாஷா (வயது 05) மற்றும் கசுன் மதுசங்க (வயது 03) என்ற இரண்டு குழந்தைகள் நச்சுப் புகையை சுவாசித்ததன் காரணமாக உயிரிழந்தனர்.

2026.05.23 முதல், மேற்கூறிய இரண்டு குழந்தைகளும், எண் 25/01, நியூ ஜனபடா, பஸ்ஸார வீதியைச் சேர்ந்த தங்கள் தந்தை, படிஞ்சா ஹென்னாயக்க முதியனசெலகே சஞ்ச்வ ரஞ்சித் குமார உடன் மேற்கூறிய விடுதியில் தங்கியிருந்தனர். மட்டக்களப்பில் உள்ள ஒரு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த தங்கள் தாயைப் பார்க்க வந்தே அவர்கள் அங்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது 

தந்தை குழந்தைகளை வைத்து விடுதி அறையைப் பூட்டிவிட்டு

அவர் வெளியில் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தந்தை வெளியில் சென்றிருந்த நேரத்தில், விடுதி அறையிலிருந்த மெத்தை திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் அறை முழுவதும் அதிகளவில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. அறை பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த நச்சுப் புகையை சுவாசித்தமையால் ஏற்பட்ட கடுமையான மூச்சுத் திணறல் காரணமாகவே குழந்தைகள் இருவரும் அறையினுள்ளேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மட்டக்களப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






Post a Comment