புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வடமராட்சி - நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
கரணவாய் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 4 இலட்சம் ரூபா பெறுமதியான 520 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பருத்திதுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
.jpeg)