உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
அதிகரிக்கப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு-புத்தாண்டிற்கு முன் கிடைக்குமா-எப்போது வரவு வைக்கப்டும்-இதோ முழு விபரம்
2026 ஏப்ரல் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளன.
பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, 17,500 ரூபா பெறுவோர் 25,000 ரூபாவாகவும், 10,000 ரூபா பெறுவோர் 15,000 ரூபாவாகவும், 5,000 ரூபா பெறுவோர் 7,500 ரூபாவாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த அதிகரிப்பு ஏப்ரல் மாதத்திற்கு மட்டுமே பொருந்தும்.
முக்கிய விவரங்கள்:
அதிகரிப்பு: அனைத்து அஸ்வெசும பயனாளிகளின் மாதாந்த கொடுப்பனவுகளும் ஏப்ரல் மாதத்திற்காக தற்காலிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
பயனாளிகள்: சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் இந்த கொடுப்பனவைப் பெறுகின்றனர்.
வழங்கல்: ஏப்ரல் 12, 2026 ஏப்ரல் அறிவிப்பின்படி) வாக்கில் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படவுள்ளது நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நிதியுதவி: இந்த அதிகரிப்பிற்காக மேலதிகமாக 8,500 மில்லியன் ரூபாய் செலவிட மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு:
அஸ்வெசும விண்ணப்பங்கள் மற்றும் மேன்முறையீடுகள் தொடர்பான தகவல்களுக்கு நலன்புரி நன்மைகள் சபையின் (WBB) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.