இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு, இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தினால் (CEWET) வழங்கப்படும் கல்விப்புலமைப்பரிசில்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள பாடசாலைகளில் க.பொ.த உயர்தரம் பயிலும் மாணவர்கள் அல்லது இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு அல்லது தொழில்நுட்பக் கல்வியினைத் தொடரும் மாணவர்கள் இப்புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர். அத்துடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் குறைந்தபட்சம் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரிகள் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன்
01. பிறப்புச் சான்றிதழின் பிரதி
02.க.பொ.த சாதாரண தர அல்லது உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுத்தாள் பிரதி
03.பெற்றோரின் வேதன விபரம் மற்றும் அவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர் என்பதற்கான தோட்ட அதிகாரியின் உறுதிப்படுத்தல் கடிதம்
04. மாணவரின் வங்கிச் சேமிப்புப் புத்தகத்தின் முதற்பக்கப் பிரதி
ஆகிய ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பப் படிவங்களை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இணையதளமான www.hcicolombo.gov.in இலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அத்துடன், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் (இல. 36-38, காலி வீதி, கொழும்பு-03) அல்லது கண்டியிலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்தில் (இல. 42, கபிலவஸ்து மாவத்தை) நேரடியாகவும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கௌரவ செயலாளர், இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் (CEWET), c/o இந்திய உயர்ஸ்தானிகராலயம், த.பெ. இலக்கம் 882, காலி வீதி, கொழும்பு-03" என்ற முகவரிக்கு 2026 ஏப்ரல் 28ஆம் திகதிக்கு முன்னதாகக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
