"சிவப்புக் கோட்டைத் தாண்டிட்டீங்கள்.. பிச்சை எடுக்க வைப்போம்!" டிரம்ப், நெதன்யாகுவுக்கு ஈரானின் பகீர் சவால்.
மத்திய கிழக்குப் போர்க்களத்தில இப்ப யாருமே கற்பனை செய்ய முடியாத ஒரு மாபெரும் திருப்பம் நடந்திருக்கு! காமேனியோட மரணத்துக்குப் பிறகு ஈரான் அப்படியே முடங்கிடும், மக்கள் பயந்துபோயிடுவினம் எண்டு நினைச்ச அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் (Qalibaf) இப்ப ஒரு மரண பயத்தைக் காட்டியிருக்கார்!
காலிபாஃப் நேரலையில தோன்றி என்ன சொல்லியிருக்கார் எண்டா, "எங்கட தலைவர் காமேனியோட மரணத்துக்குப் பிறகான அத்தனை திட்டங்களையும் நாங்க முன்கூட்டியே தயார் செய்து வைச்சிட்டம். இனி ஒரு மாபெரும் தலைமைச் சபை (Leadership Council) உருவாக்கப்படும். அதுல எங்கட ராணுவமும், அதிகாரிகளும், மக்களும் முன்னெப்பவும் இல்லாத அளவுக்கு ஒரு அசுர பலத்தோட எழுந்து நிப்பினம்" எண்டு அடிச்சுச் சொல்லியிருக்கார்.
"எங்கட பாதுகாப்புப் படைகள் இதுவரைக்கும் தங்கட சக்தியில ஒரு சின்னப் பகுதியைத் தான் பாவிச்சிருக்கினம். எங்கட முழுமையான பலத்தை இனித்தான் நீங்க பாக்கப் போறீங்கள்" எண்டு அவர் விடுத்த சவால், அமெரிக்காவையே அதிரவைத்துள்ளது.
அதுமட்டுமில்ல, அவர் நேரடியா டிரம்ப்பையும் நெதன்யாகுவையும் பாத்து ஒரு பெரிய சவாலை விட்டிருக்கார். "இந்தக் கேவலமான குற்றவாளிகளே.. நீங்க எங்கட ஆகப்பெரிய சிவப்புக் கோட்டை (Red Line) தாண்டிட்டீங்கள்! இதுக்கு நீங்க ஒரு மாபெரும் விலையைக் குடுத்தே ஆகோணும். இது சும்மா ஒரு சாதாரணப் போர் இல்ல, பல வருஷங்களா அடக்கி வைக்கப்பட்டிருந்த எங்கட கோபத்தோட இறுதிப் பழிவாங்கல் (Final Revenge) இப்ப தொடங்கிட்டுது!" எண்டு ஆக்ரோஷமாச் சபதமெடுத்திருக்கார்.
"எங்கட பலகோடி ஈரானிய மக்களோட ஆதரவோட, உங்களை நாங்க எப்படி அடிக்கப் போறம் எண்டா.. நீங்களே எங்கட கால்ல வந்து விழுந்து பிச்சை எடுக்கிற அளவுக்கு எங்கட அடி மிகக் கொடூரமா இருக்கும்! உங்கட இந்தப் பகல் கனவு இன்னும் சில நாளைக்குத் தான் தாக்குப் பிடிக்கும்" என அவர் விடுத்த பகீர் எச்சரிக்கை, ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியெடுத்துள்ளது.
காலிபாஃப் விடுத்த இந்த எச்சரிக்கை சும்மா வெறும் வாய்ச்சவடால் இல்லை! அவர் இதைச் சொல்லிக்கொண்டிருக்கக்கவே, களத்தில ஈரான் தன்னோட வெறித்தனமான வேட்டையைத் தொடங்கிட்டுது. இஸ்ரேலோட மையப்பகுதியான டெல் அவிவ் (Tel Aviv) மேல ஈரான் நேற்றிரவு வீசின 200-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள், இஸ்ரேலோட 'அயர்ன் டோம்' (Iron Dome) பாதுகாப்பைச் சுக்குநூறா உடைச்சுப்போட்டு உள்ளுக்க இறங்கியிருக்கு.
சின்னாபின்னமாகியிருக்கு! ஒரு 20 மாடிக் குடியிருப்பு முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டதில, இஸ்ரேலியப் பெண் ஒருவர் பலியாகியிருக்கார். "எங்கட வான் பாதுகாப்பு 100 வீதம் அரண் கிடையாது" எண்டு இஸ்ரேல் ராணுவமே இப்ப ஒத்துக்கொண்டிருக்கு எண்டா, ஈரானோட இந்தப் பழிவாங்கல் எவ்வளவு கொடூரமா இருக்கு எண்டதைப் பாத்துக்கொள்ளுங்கோ!
மறுபக்கம் இஸ்ரேலும் சும்மா இருக்கேல்ல. 1200-க்கும் மேற்பட்ட குண்டுகளை அமெரிக்காவோட சேர்ந்து ஈரானுக்குள்ள வீசியிருக்கினம். அதில மினாப் (Minab) நகரத்தில ஒரு ஆரம்பப் பாடசாலை அழிக்கப்பட்டு 148 உயிர்கள் பலியாகியிருக்கு. இந்தக் கோபம் தான் இப்ப ஈரானை இன்னும் வெறியேத்தியிருக்கு.
ஈரான் வீதிகளில இறங்கி அழுதுகொண்டிருக்கிற மக்கள் எல்லாரும் இப்ப, "இஸ்ரேலை உலக வரைபடத்தில இருந்தே அழிக்கோணும்" எண்டு சபதமெடுக்கினம். டிரம்ப்போட "வரலாறு காணாத அழிவு வரும்" எண்ட எச்சரிக்கையும், ஈரானோட "பிச்சை எடுக்க வைப்போம்" எண்ட சவாலும் இப்ப 3-ஆம் உலகப்போருக்கு நேரடியா வழிவகுத்திருக்கு.
