வடக்கின் மாபெரும் சமர்-வெற்றி வாகை சூடியது யாழ் மத்திய கல்லூரி

 

யாழ். மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் 119 ஆவது ஆண்டாக நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.

யாழ். மத்திய கல்லூரியில் கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமான போட்டி மூன்றாவது நாளாக நேற்று (07) இடம்பெற்றது. அதில் மூன்று விக்கெட்டுகளால் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது. 


சென்.ஜோன்ஸ்கல்லூரி முதல் இனிங்ஸில் 119 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி 95 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

மீண்டும் இரண்டாம் இனிங்ஸை ஆரம்பித்த சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 223 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தன. 

இந்நிலையில் 248 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த மத்திய கல்லூரி அணி 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, 250 ஓட்டங்களை பெற்று அபார வெற்றி பெற்றது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.