அணு ஆயுதப்போர் வெடிக்கும்.! "பகிரங்கமாக அறிவித்த ஈரான்". நடு நடுங்கும் உலக நாடுகள். அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்தடுத்த தாக்குதல்களால் பரபரப்பு..!!
அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 87 ஈரான் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலால் ஆத்திரமடைந்துள்ள ஈரான், இஸ்ரேலின் அணுசக்தி மையங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் அணு ஆயுதப் போர் குறித்த அச்சம் நிலவுகிறது.
இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வராது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த மோதல் இன்னும் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க செனட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. இது ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்த வழிவகுத்துள்ளது.
அமெரிக்க மையக் கட்டளை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானின் 20-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் இதுவரை அழிக்கப்பட்டுள்ளன. இதில் ஈரானின் பெருமைக்குரிய 'சோலைமணி-கிளாஸ்' போர்க்கப்பலும் அடங்கும். தரைப்படையை இறக்காமலேயே, வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல் மூலம் ஈரானைக் கட்டுக்குள் கொண்டு வருவோம் என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 5 நாட்களில் போரின் தாக்கம் பெரும் துயரங்களை ஏற்படுத்தியுள்ளது இந்த தாக்குதலில் ஈரானில் தாக்குதலில் இதுவரை 1,097 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 168 குழந்தைகள் மற்றும் ஒரு பள்ளி மீதான தாக்குதலில் பலியான 14 ஆசிரியர்களும் அடங்குவர். ஈரான் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் உட்பட 10 பேர் பலியாகினர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர். தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா நிலைகள் மீது குண்டுமழை பொழியப்படுவதால், 84 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் சாலைகளில் 18 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த தலா ஒரு குடிமகன் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் கூறுகையில், "அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் செய்த குற்றங்களுக்கு இப்போது அவர்கள் இரத்தத்தால் விலை கொடுத்து வருகின்றனர். அதிபர் டிரம்ப்பின் கடுமையான முடிவுகள் ஈரானை நிலைகுலையச் செய்துள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.
