இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய போர்க்கப்பலுக்கு அருகில் அதிகளவான சடலங்கள்
அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலுக்கு இலக்கான ஈரானிய போர்க்கப்பல் IRISDena இலங்கையின் தென்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் இலங்கை கடற்படையால் அதிலிருந்த சிலர் மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதல் காரணமாக மேற்படி ஈரானிய போர்க்கப்பலில் இருந்த சுமார் 180 பேர்களில் 148 பேர்களை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் காயங்களுடன் சுமார் 32 பேர் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளனர்.
ஈரானிய கப்பல் மூழ்கி கொண்டிருக்கும் நிலையில் ஏனையோரையும் மீட்கும் பணிகளில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் கப்பல் மூழ்கிய பகுதியில் அதிகளவான சடலங்களை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது




