கனடா, ஒன்ராறியோவில் உள்ள Loyalist Township பகுதியில் லக்ஷா எனும் இளம் பெண் தன் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தீ விபத்தில் உயிரிழந்த பெண் தனது அம்மாவுக்கு அழைத்து, “அம்மா, நம் வீட்டில் தீப்பற்றி எரிகிறது, கதவையும் தீ சூழ்ந்துள்ளதால், வெளியே வர முடியவில்லை. என்னைக் காப்பாற்றுங்கள்” என கதறி உள்ளார்.
மகளின் பயங்கர அழைப்பைக் கேட்டதும், உடனே காரில் வீட்டிற்கு சென்ற போது மகள் உயிரழந்துள்ளமை தெரியவந்துள்ளது,
சம்பவத்திற்கு காரணம் என்ன என்பதற்கான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இச் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.